புதன், 19 பிப்ரவரி, 2014

காற்றாய் வரும் காதலி...



கண்கள் தூங்கும்
இரவினிலே...
காற்றாய் வருகிறாள்
கனவில் காதலி...

கையில் இருக்கும்
காகிதமெல்லாம்...
கவிதை மழையில்
நனைகிறது !

கவித்துளிகளில் ஒன்று
கண்ணில் பட - கண் 
விழித்து பார்க்கையிலே
காற்றில் பறக்கிறது காகிதமொன்று !

பறந்து கொண்டிருந்தது
காகிதம் மட்டுமல்ல !
காற்றாய் வந்த - என்
காதலியும் தான்...

3 கருத்துகள்: